Friday 26 August 2011

என்னை ரசிக்கும் என் கவிதையே! உன்னை ரசிக்கும் என் கவிமலர்களே!!.




நீ என் மனதை ரசிப்பதாக
கூறியபிறகு.....
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கிவிட்டன!!


படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!

கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!


இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்  
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து 
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!

67 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!

லைப்ரரில புக் வாங்குனா திரும்ப கொடுக்கனுமா? ஹா ஹா எங்க பரம்பரைக்கே அந்த பழக்கம் கிடையாதே? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>கண்ணீர் பூவிலிருந்து
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!


உஷ் அப்பா முடியல.. காலங்காத்தால ஒரே அழுகாச்சி காவியமா இருக்கே?

தமிழ் உதயம் said...

காதல் கவிதை மொழியில் பேசுகிறது.

vidivelli said...

படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!


அருமையான கவிதை..
வரிகள் ஒவ்வொன்றும் அசத்தல் தான்..
அன்புடன் பாராட்டுக்கள்..

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//லைப்ரரில புக் வாங்குனா திரும்ப கொடுக்கனுமா? ஹா ஹா எங்க பரம்பரைக்கே அந்த பழக்கம்கிடையாதே?//

அட இது புது செய்தியாய் இருக்கே.படிக்கக்கூடத் தெரியுமா உங்களுக்கு.?

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//உஷ் அப்பா முடியல.. காலங்காத்தால ஒரே அழுகாச்சி காவியமா இருக்கே?//


அழுதால் நல்லதாம். நான் சொல்லல. ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

கடம்பவன குயில் said...

@ தமிழ் உதயம்

//காதல் கவிதை மொழியில் பேசுகிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

கடம்பவன குயில் said...

@ vidivelli

//அருமையான கவிதை..
வரிகள் ஒவ்வொன்றும் அசத்தல் தான்..
அன்புடன் பாராட்டுக்கள்..//

என்னை ஊக்கப்படுத்தும் தங்கள் பாராடடுக்கு நன்றி சகோ

சக்தி கல்வி மையம் said...

புதிய கோள் விழுந்தாலும்
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!//
அருமையான வரிகள்..

பாராட்டுகள்..

மகேந்திரன் said...

///இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!///

உன்விழியினின்று
துளிநீர் விழினும்
தாங்காது என் நெஞ்சு
அழகு அழகு
அழகிய சொற்கள் கோர்த்து
நிறைந்த கவிதை.
நல்லா இருக்கு நண்பரே.

தினேஷ்குமார் said...

ஆஹா காதல் ரசம் ...

Praveenkumar said...

மிகவும் ரசித்து படிக்க வைத்த அருமையான கவிதை வரிகள். தொடர்ந்து கலக்குங்க...

M.R said...

அருமையான காதலை வெளிப்படுத்தும் கவிதை ,பகிர்வுக்கு நன்றி

கடம்பவன குயில் said...

@ !*வேடந்தாங்கல் கருண்

தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ மகேந்திரன்

//உன்விழியினின்று
துளிநீர் விழினும்
தாங்காது என் நெஞ்சு
அழகு அழகு
அழகிய சொற்கள் கோர்த்து
நிறைந்த கவிதை.
நல்லா இருக்கு நண்பரே.//

ஆஹா... ஒரு நாட்டுப்புற கலையே கவிதையை ரசிக்கிறதா??? நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ தினேஷ்குமார்

//ஆஹா காதல் ரசம் ...//

உப்பு காரம் அளவாய் உள்ளதா??

நன்றி சகோ.

கடம்பவன குயில் said...

@ பிரவீன்குமார்

//மிகவும் ரசித்து படிக்க வைத்த அருமையான கவிதை வரிகள். தொடர்ந்து கலக்குங்க...//

நன்றி ஆசானே.

கடம்பவன குயில் said...

@ M.R.

அருமையான காதலை வெளிப்படுத்தும் கவிதை ,பகிர்வுக்கு நன்றி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான கவிதை வரிகள்.

Anonymous said...

அருமையான கவிதை...
அசத்தல் வரிகள்...
பாராட்டுக்கள்...

காட்டான் said...

வாழ்த்துக்கள் காலையிலேயே அழுதுட்டு போறோமுங்க.. அழுதா நல்லதென்னு ஆராய்சி சொன்னா செய்திட வேண்டியதுதான்.. ஹி ஹி

காட்டான் குழ போட்டான்

முனைவர் இரா.குணசீலன் said...

மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

இராஜராஜேஸ்வரி said...

கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!//

அருமையான கவிதையும் படங்களும் அருமை. பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

யாரைப்பார்த்து படிக்கத்தெரியுமான்னு கேட்டீங்க, அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோமில்லை?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதை... தொடர்ந்து கலக்குங்கள்

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைவரிகள் வாழ்த்துக்கள் சகோ ...

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 7

நிரூபன் said...

பெண்ணை ஒரு கவிதையாக உருவகித்து, கவிதையின் உள்ளம் காயம்படும் போது ஏற்படும் உணர்வலைகளை உங்களின் இக் கவிதை தாங்கி வந்துள்ளது.

நிரூபன் said...

அக்காச்சி, நலமா?
நீண்ட நாட்களாக பதிவேதும் எழுதமால் இருக்கிறீங்களே?
ரொம்ப பிசியாகிட்டீங்களா?

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமையான படைப்பு
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
சொற்களின் அற்புதக் கட்டமைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் said...

@ !பனிததுளி சங்கர்!

//மிகவும் அருமையான கவிதை வரிகள்.//

நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ ரெவெரி

//அருமையான கவிதை...
அசத்தல் வரிகள்...
பாராட்டுக்கள்...//

நன்றி சகோ

கடம்பவன குயில் said...

@ காட்டான்

//வாழ்த்துக்கள் காலையிலேயே அழுதுட்டு போறோமுங்க.. அழுதா நல்லதென்னு ஆராய்சி சொன்னா செய்திட வேண்டியதுதான்.. ஹி ஹி//

அண்ணே அழறவங்க ஹி...ஹி...ன்னுதான் அழுவாங்களான்னே. புதுசாயிருக்கே.

கடம்பவன குயில் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..//

மிக நன்றி ஐயா

கடம்பவன குயில் said...

இராஜராஜேஸ்வரி said


//அருமையான கவிதையும் படங்களும் அருமை. பாராட்டுக்கள்.//

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா.

கடம்பவன குயில் said...

@ !♥!தோழி பிரஷா


//அருமையான கவிதை... தொடர்ந்து கலக்குங்கள்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி

கடம்பவன குயில் said...

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி சகோதரி. உங்கள் ஓட்டுக்கு அநேக கோடி நன்றிகள். கடமையை கரெக்ட்டாக செய்திட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி

கடம்பவன குயில் said...

நிரூபன் said..

//அக்காச்சி, நலமா?
நீண்ட நாட்களாக பதிவேதும் எழுதமால் இருக்கிறீங்களே?
ரொம்ப பிசியாகிட்டீங்களா?//

பெண்களுக்குத்தான் வயதாவதில்லை என்றால் உங்களுக்குமா சகோ. உங்கள வயதை குறைப்பதற்காக என்னை அக்காச்சி என்கணுமா?? சரி சரி உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமென்றால் என்னை பாட்டி என்று கூட கூப்பிடுங்கள்.

என் மனதை பாதித்த ஒரு சோக நிகழ்வு. அதிலிருந்து இன்னும் முழுதாக வெளிவரவில்லை. அதனால்தான் நீண்ட இடைவெளி.

கடம்பவன குயில் said...

@ மனோ சாமிநாதன்

//உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

என்னையும் என் கவிதையையும் அங்கீகரித்தமைக்கு என் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடம்பவன குயில் said...

Ramani said...
மிக மிக அருமையான படைப்பு
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
சொற்களின் அற்புதக் கட்டமைப்பு
தொடர வாழ்த்துக்கள்


தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

கடம்பவன குயில் said...

மாய உலகம் said...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்//

கவிதையைப் பற்றி சொல்ல பெரிதாய் ஒன்றுமில்லை என்பதை எவ்வளவு அற்புதமாய் பாலிஷா சொல்லிட்டுப் போறீங்க சார். இதுதான் டைரக்டோரியல் டச் என்பதோ!!!!????

மாய உலகம் said...

ஆஹா மன்னிக்கவும்... ரசிக்க மறுக்கவில்லை... வாசிக்க மறந்துவிட்டேன்..

http://sengovi.blogspot.com/2011/08/blog-post_8144.html இந்த பதிவில் தங்களது பிண்ணுட்டம் பிடித்து போனது.. தளத்தின் பெயரை ஞாபகம் வைத்திருந்தேன்.. பிறகு வலைச்சரத்தில் அறிமுகமாகிருந்ததை பார்த்ததும் நேரே வந்து வாழ்த்திவிட்டு சென்று விட்டேன்...இன்று எதாட்சையாக ஞாபகம் வந்ததும் வந்தேன்.... மறுபடியும் மன்னிக்கவும்...இதோ கவிதை படித்து விட்டு வருகிறேன்

மாய உலகம் said...

படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!//

கவிதைகளுக்கிடையில் ஒரு ஹைக்கூ கவிதை - சூப்பர்... இனி தொடர்ந்து வருவேன் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

தமிழ் மணம் 9 & all voted

குறையொன்றுமில்லை. said...

அருமையான கவிதை வரிகள் ஒவ்வொன்ரையும் ரசித்து சொல்லி இருந்த விதம் நல்லா இருக்கு.

Neya S said...

அழகிய கவிதை ...
அசத்தல் வரிகள் ...
பாராட்டுக்கள் ...

Anonymous said...

அழகிய கவிதை...
அசத்தல் வரிகள்...
பாராட்டுக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

ஓணம் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஓணத் திருநாள் வாழ்த்துக்கள்.

M (Real Santhanam Fanz) said...

சூப்பர் வரிகள். வாழ்த்துக்கள்.

M.R said...

படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!

அருமையான வரிகள்

M.R said...

என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!

கூடவே மனதிலும்

M.R said...

தமிழ் மணம் பத்து

தக்குடு said...

ஆக, நீங்க லைப்ரரில வாங்கின புக்கை எல்லாம் திரும்ப குடுப்பீங்க!னு சொல்ல வரீங்க!! :))

மாய உலகம் said...

மாய உலகம் said...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

மாலதி said...

இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!//
அதுதானே காதல் காதலில்
மேன்மை மூகமையாக இடம் பெறுகிறது
இதைத்தான் வள்ளுவம் மலரினும் மெல்லிது காமம் போதுமா?

Anonymous said...

"கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!""
- அழகான ரசனைக்குரிய
வரிகள்..,
பாராட்டுக்கள்.....

ADMIN said...

கடம்ப வனப் பூங்காவில் பல மலர்கள் மணம் வீசுகிறது.. ரசிக்கக்கூடிய வகையில் கவிதைகள் காய்த்து இருக்கிறது..! நானும் இனிப் பூங்காவில் உலாவரப் போகிறேன்..!!

Riyas said...

கவிதை நல்லாயிருக்குங்க,,

கடம்பவன குயில் said...

சின்னதூரல் said...

//"கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!""
- அழகான ரசனைக்குரிய
வரிகள்..,
பாராட்டுக்கள்..//

வருக வருக புதிய விருந்தினரே. தங்கள் வரவு நல்வரவாகுக..

கடம்பவன குயில் said...

தங்கம்பழனி said...

//கடம்ப வனப் பூங்காவில் பல மலர்கள் மணம் வீசுகிறது.. ரசிக்கக்கூடிய வகையில் கவிதைகள் காய்த்து இருக்கிறது..! நானும் இனிப் பூங்காவில் உலாவரப் போகிறேன்..//

நன்றி நண்பரே. பூங்கா தங்கள் வருகையால் பொலிவுபெற்றது.

கடம்பவன குயில் said...

மாலதி said

//அதுதானே காதல் காதலில்
மேன்மை மூகமையாக இடம் பெறுகிறது
இதைத்தான் வள்ளுவம் மலரினும் மெல்லிது காமம் போதுமா//

உண்மைதான் சகோதரி.தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றிகள்

Anonymous said...

நல்ல வரிகள் ரசித்தேன், வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

vidivelli said...

அன்பு உறவே நலமா?
மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.



இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!



அழகான கற்பனை.
அருமையாய் வடித்திருக்கிறீங்க..
அன்புடன் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!


இனிய இதயத்திற்குப் பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said...

வலிதரும் கவிதை வரிகள் அருமை சகோ .வாழ்த்துக்கள் .முடிந்தால் வாருங்கள் என் கவிதைகள் காத்திருக்கின்றன .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...

Link

Related Posts Plugin for WordPress, Blogger...