Monday 20 February 2012

விருது எனும் அட்சயப்பாத்திரம் - யான் பெற்ற விருது பெறுக இப்பதிவுலகம்


அன்பு உள்ளங்களுக்கும் அருமை உறவுகளுக்கும் என் இனிய வணக்கங்கள். என் அரிதான வருகைக்கு உண்மையான காரணம் என் இணைய இணைப்பும் , மின்சாரமும் மற்றும் குடும்ப சூழ்நிலையும் தான்.  ஆனாலும் என் மௌனத்தை கலைத்து பதிவுப்பக்கம் வரத்தூண்டிய முக்கிய காரணி ”VERSATILE BLOGGER AWARD" . (THANKS TO SISTER YUVARANI TAMILARASAN, KIRUKALKAL BLOG) .

சகோதரி கிறுக்கல்கள் யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய இந்த விருதினை , என் பதிவுகளும் பிடித்துப்போய் (!) எனக்கு ஃபாலோயராக இணைந்து என்னை ஊக்கப்படுத்திய அன்பு தோழமைகளுக்கு சமர்பிக்கிறேன்.

மொய்க்கு மொய் கலாச்சாரத்துக்கு நடுவே, நான் தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக உங்களையும் உங்கள் பதிவுகளையும் தொடரமுடியவில்லை என்றாலும் மொய் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து என்னுடன் கைகோர்த்துள்ள என் பதிவுலக நட்புகளை நினைத்து பெருமைகொள்கிறேன். தலைவணங்குகிறேன்.


பிடித்த சில விஷயங்களை பகிர்ந்துகொண்டு இந்த விருதையும் 5 நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எனக்குப் பிடித்தவை:

1. மழை எனக்குப்பிடித்ததில் முதலிடம் வகிப்பது. மழையில நனைவது மிகவும் பிடிக்கும்.

2. வாசித்தல் சுவாசிக்காமல் கூட இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது. பதிவு எழுதுவதைவிட நண்பர்கள் பதிவை வாசிப்பது பிடிக்கும். தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும்.

3. ஆலயம்   எனக்கு மிகவும் பிடித்த இடம். அமைதியான  பழமையான ஆலயங்களில் அமர்ந்து தியானம் செய்வதும் ஆலயத்தின் கலைநயத்தை ரசிப்பதும் மிகவும் பிடிக்கும்

4.  மலைவாசஸ்தலம்.  மலையும் மலைசார்ந்த இடமும் என்னைக் கவர்ந்தவை.

5. மெலடி பாடல்கள் மெல்லிய மெலடி பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.

6.  மழலைகள்  மழலைகள் குறும்புக்கு நான் அடிமை. மழலைகளுடன் நேரம் செலவிட பிடிக்கும.

இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் எல்லோரையும் எனக்கு ரொம்பப்பிடிக்குங்க........நம்புங்க ப்ளீஸ்......


பொதுவாக எனக்கு யாரையும் வெறுக்கத்தெரியாது. ஒருவரிடம் இருக்கும் தீய பழக்கங்களையும் மோசமான குணத்தையும் மட்டுமே வெறுக்கலாமே தவிர மனிதர்களை அல்ல.

இந்த விருதை நான் ஐந்து நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் பெருமையடைகிறேன்.

நான் விருதளிக்க ஆசைப்படும் வலைப்பூக்கள்:

1. கோகுல் மனதில் -  கோகுல் மகாலிங்கம்

http://gokulmanathil.blogspot.in/2011/12/blog-post.html இவரது வலைப்பூவில்
விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளோடு காதல் கவிதைகள் , பாதித்த நிகழ்வுகள் என்று கலந்துகட்டி அடிப்பார்.  இந்த சிறிய வயதிலேயே இவரிடம் இருக்கும்  சமுதாய அக்கறை என்னை வியக்கவைக்கிறது.

2. விழுதுகள் - மதுரை சரவணன் ஆசிரியர்

http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_24.html மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தலோடு ஆசிரியர் பணி முடிவடையாது. அவர்களின் மனவளத்திற்கும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை ஆணித்தரமாக தன் பதிவுகளில் கூறும் இந்த ஆசிரியர் மிகமிக அபூர்வமான ஆசிரியர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

3. மாதவிப்பந்தல் - கண்ணபிரான் , ரவிசங்கர். (KRS)

http://madhavipanthal.blogspot.in/2012/02/blog-post.html தமிழின் பெருமையையும் ஆன்மிகத்தையும் இணைத்து அதிகம் விளையாடுமிடம் மாதவிப்பந்தல் .

4. வாங்க ப்ளாக்கலாம் - ஆனந்த் நாராயணன். ( அனந்து)

http://pesalamblogalam.blogspot.in/  இவருடைய கதைகள் , கவிதை, சினிமா விமர்சனம் போன்றவற்றிற்கு நான் ரசிகை.

5. வேர்களைத்தேடி - முனைவர் இரா. குணசீலன்


http://gunathamizh.blogspot.in/p/blog-page.html  இவர் தன்னுடைய மாணவர்களின் படைப்புகளையும்  திறமைகளையும் தன் பதிவின்மூலம் வெளிக்காட்டுபவர்.

Link

Related Posts Plugin for WordPress, Blogger...