நீ என் மனதை ரசிப்பதாக
கூறியபிறகு.....
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கிவிட்டன!!
படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!
கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!
இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!
Tweet | |||||