Wednesday 14 March 2012

நாம் தொலைத்து வரும் நம் பொக்கிஷங்கள்...!! (Missing-Traditional-Treasures)

ணக்கம் நட்புகளே..! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இப்பதிவின் மூலமாக சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

ந்த புண்ணிய பாரத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமையடைகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் நம் இந்திய மண்ணின் பெருமைகளான சித்த மருத்துவம், புராண காலத்திய தொழில் நுட்பங்களான விமானத்தின் முன்னோடி விசைகள், தர்ம சிந்தனைகள், தனி மனித ஒழுக்கம், வேதாந்த சாரம், நவ கோள்களின் கோலாட்டங்கள், சாரங்கள், அண்டவெளியின் சலனங்கள் பற்றிய நுட்பங்கள் மற்றும் முனிவர்கள் கண்டறிந்த மந்திரங்கள் அவற்றினால் மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் ஏமாளித்தனத்தினாலும் அறியாமையாலும் அன்னிய நாட்டினருக்கு தாரைவார்த்து விட்டு நிற்கிறோம். 
தாரை வார்த்த விஷயங்களையே திரும்ப ஏதோ ஒரு பெரிய அதிசயமான அதி அற்புதமான ஒன்றாக நினைத்து அவர்களிடமிருந்து வந்ததாய் எண்ணி நாம் அவற்றை கடைபிடித்து உபயோகித்து பெருமைபடுகிறோம். நம் சொந்த தாய்நாட்டில் நமக்கு சொந்தமான பொக்கஷங்கள்தான் அது என்பதையே அறியமுடியாத அப்பாவிகளாயிருப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை..!
ம் பாரத நாட்டின் மூலிகைகளும், அஷ்டாங்க யோகங்களும், நவ யாகங்களும் அந்நிய நாட்டிலிருந்து குப்பிகளில் அடைக்கப்பட்ட மருந்துகளாகவும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவ சிகிச்சைகளாகவும் அயல்நாட்டு காப்புரிமையோடு திரும்பி வருவதை பார்க்கும்போது மனம் வேதனையால் தவிக்கிறது.

இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறோம் நாம்???

னியும் இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டுமானால் நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகளை நாம் முதலில் உணர்வதோடு நம் இளைய சமுதாயத்தினர்களுக்கும் உணர்த்த வேண்டும். அரிய கலைகளையும் சக்திகளையும் அடைந்தவர்கள் மூடிமூடி தங்களுக்குள் அவற்றை வைத்திடாமல் நான்கு பேர் அறியும்படி அனைத்தையும் அனைவருக்கும் கற்றுககொடுக்கவேண்டும்.
ணம் சம்பாதிப்பது மட்டுமே நம் குறிக்கோளாயிருக்காமல் அதனோடு நாம் பிறந்த இந்த புண்ணிய தேசத்திற்கும் நம்மாள் இயன்ற கைமாறாக இந்திய திருநாட்டின் சிறப்புகளையும் பாரம்பரியத்தையும் போற்றி உலக மக்கள் அனைவரும் அறியும்படி பாரதத்தின் பெருமையை உயர்த்த பாடுபடவேண்டும். இல்லையேல் பாரதத்தாய் நம்மை மன்னிக்கவே மாட்டாள்.
(படங்கள்.- கூகுள் தேடுபொறிக்கு நன்றி)
ம் இந்திய திருநாட்டை உலகளவில் மிகமிக உன்னதமான நாடாக திகழச்செய்ய வேண்டியது நம் கடமை. அதற்கு ஆவன செய்ய ஒவ்வொருவரும் எடுத்துவைக்கும் முதல் அடியை நம் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அழிந்து வரும் நம் அரிய பண்டைய நுண்கலைகளை மருத்துவத்தை , நம் முனிவர்கள் மற்றும் முன்னோர்கள் புராணங்கள் வழியே நம்மிடம் விட்டுச்சென்ற நுட்பங்களை அணுவிஞ்ஞானம் முதல் ஆதவன் கதிர் விஞ்ஞானம் வரை உணர்ந்து இளைய தலைமுறைகளுக்கு்ம் அவற்றின் அருமைகளை விளக்கி பயன்படுத்தி காப்பாற்றச் செய்யவேண்டும்.

வாழ்க பாரதம்...! வளர்க பாரத பண்பாடு..!!
* * * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...