Friday 3 June 2011

துயிலாத கண்கள்..!!

அவள் நிலவென்னும் வதனத்தில்
கண்களைக் காணவில்லை நான்....
கருவண்டுகளைத்தான் கண்டேன்..!!
அவள் இதழில்....
கோவைப்பழச் சிவப்பையே கண்டேன்!!
அன்னமே இவளிடம்தான்
நடைபயின்றதோ??


மானும் இவளைக் கண்டுதான்
மருண்டோடியதோ..??
மயிலும் நாட்டியத்தில்
தோல்விகண்டது இவளிடம்!!

குயிலின் குரல்கொண்டவள்
குன்றாத ஒளியை மேனியாக்கி,
எனக்கு துயிலாத கண்களைக்
கொடுத்துவிட்டாள்..!!
* * * * * * *

19 comments:

Anonymous said...

முதல் வண்டு நான் தான்!!

Anonymous said...

அடடா எனக்கு முன்னாடி நிறைய பேர் இருக்காங்க போல...கவிதை தேன்...வரிகள் ஒவ்வொன்றும் ரசனை....அடிக்கடி வருவேன்!!

சக்தி கல்வி மையம் said...

கலக்கலான கவிதை சகோ..

rajamelaiyur said...

Kavithai and photo super

rajamelaiyur said...

I am the new visitor of your blog . . . Your blog is very super . . .

கடம்பவன குயில் said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

வாங்க வாங்க . தங்கள் வரவு நல்வரவாகுக. அடிக்கடி வாங்க. ஆதரவு தாங்க. (நல்ல அரசியல்வாதியாயிட்டு வரேனா??)

கடம்பவன குயில் said...

@ வேடந்தாங்கல்-கருன்

நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ வேடந்தாங்கல்-கருன்

நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ ”என் ராஜபாட்டை”-ராஜா

//kavithai and photo super//

நல்லவேளை photo மட்டும் சூப்பர்னு சொல்லியிருந்தால் நான் அழுதிருப்பேன்.

கடம்பவன குயில் said...

@ ”என் ராஜபாட்டை”-ராஜா

//I am new visitor of your blog...
Your blog is very super. ..//

தங்களின் புதுவரவு நல்வரவாகுக...
பிளாக் சூப்பர்ங்கறது ....ஏதோ வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதே!...

கடம்பவன குயில் said...

@ ”என் ராஜபாட்டை”-ராஜா

//I am new visitor of your blog...
Your blog is very super. ..//

தங்களின் புதுவரவு நல்வரவாகுக...
பிளாக் சூப்பர்ங்கறது ....ஏதோ வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதே!...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணனோட டைரில இருந்து அண்ணி நைஸா சுட்டுட்டாங்க போல ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஓட்டையே நீங்க இன்னும் போட்டுக்கலையா? தமிழ் மனத்துல/.. சுத்தம்.. பாவம் ஹரி

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

எப்பவுமே தமிழ்மணத்துக்கும் எனக்கும் தகறாருதான். திடீரென்று தமிழ்மணம் பட்டையே காணாமல் போய்டும்.


//அண்ணனோட டைரில இருந்து அண்ணி நைஸா சுட்டுட்டாங்க போல ஹா ஹா//

டைரியை தல கிட்ட இருந்து அடிச்சுட்டு வந்து கொடுத்ததே நீங்கதானே!

Unknown said...

ம்ம் கலக்குறீங்க போங்க

இராஜராஜேஸ்வரி said...

குயிலின் குரல்கொண்டவள்
குன்றாத ஒளியை மேனியாக்கி,
எனக்கு துயிலாத கண்களைக்
கொடுத்துவிட்டாள்..!!//
Nice..

Anonymous said...

புதுக்கவிதை எப்ப வரும்..அடுத்த பதிவு எப்ப..?

கடம்பவன குயில் said...

@இராஜராஜேஸ்வரி

//Nice..//

மிக்க நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகான வரிகளுடனான கவிதை அருமை....

Link

Related Posts Plugin for WordPress, Blogger...