Saturday 14 May 2011

அடுத்த தமிழக ஆட்சி எப்படி இருக்கனும்..?? - (Next-TN-Government)

என்ன நண்பர்களே..!??! எலக்சன் ரிசல்ட் பரபரப்புக் காட்சி ஓய்ந்ததா? சங்கர் பட கிளைமாக்ஸை விட பரபரப்பாய் கழிந்தது ஓட்டு எண்ணிக்கை காட்சிகள். இந்திய கிரிக்கெட் டீம் கலந்து கொண்ட பைனல்ஸ் பார்க்கிற மனநிலையோடு டீவி பெட்டி, கணிணி முன் தவமாய் தவமிருந்த மக்கள் அனைவருக்கும் இப்போ யார் கோப்பையை   மன்னிக்கவும் யார் ஆட்சியை கைப்பற்றியது என்று தெரிந்துவிட்டதல்லவா..?

இந்த மாற்றம் மக்கள் தந்தது என்பதில் எள்ளளவும் யாருக்குமே சந்தேமில்லை. யார் நல்லாட்சி தருவார்கள் என்ற எண்ணத்தில் யாரும் ஓட்டுப் போட்டிருக்க மாட்டார்கள். யாருக்கும் அம்மா மேலயோ, அ.தி.மு.க.மேலேயோ பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்று விரும்பியதால் அ.தி.மு.க. வை விட்டால் இல்லையென்ற நிலையில் எடுத்த முடிவுதான் இது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ  சர்க்கரை என்ற நிலைதான் இது.

இந்த 5 வருடத்தில் மக்கள் படாதபாடுபட்டு இன்னொரு மாற்றத்தை எதிர்பார்க்க வைக்காமல் அம்மா ஆட்சி அமைய நாமெல்லோரும் ஆண்டவனையும், அம்மாவையும் வேண்டிக்குவோம்.

இந்த மாற்றத்ததை எதற்காக எதிர்பார்த்தோம் என்பதை அம்மா புரிஞ்சுட்டு நடந்தால் நமக்கும் நல்லது. அம்மாக்கும் நல்லது. அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததையும் எனக்கு தெரிஞ்சவரையிலும் கொஞ்சம் கடிதமாய் எழுதிவைப்போம். நம்ம பதிவர்கள் யாராவது என் கடிதத்தை அம்மாவிடம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கைதான். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.  காதில் விழுவதும் விழாததும் அவங்க அவங்க அதிர்ஷ்டம். (நம்ம அதிர்ஷ்டம்???)

1.விலைவாசி்: அப்பப்பா....... கடந்த 5 வருடங்களாய் மக்களை பாடாய் படுத்துவதில் முதலிடம் இந்த விலைவாசிக்குதான்.  முதல்வேலையே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதான். செய்வீங்களா?

2.மின்வெட்டு: ஆற்காட்டார் எங்களை வேக்காட்டில் நிற்கவைத்திருந்தார். சின்ன சின்ன தொழிற்சாலைகள், சிறு தொழில்நிறுவனங்கள் எல்லாம் சுத்தமாய் லாபம் பார்க்க முடியாமல் இழுத்துமுடிட்டு ஓடிபோக வைத்த பெருமை முழுதும் ஆற்காட்டாரையே சாரும். இது உடனே கவனித்து சரிசெய்யவேண்டிய மிக மிக முக்கிய அவசர வேலை.

3.குடும்ப அரசியல்:  இதில் நொந்து நூடுல்ஸ் ஆனவங்க தான் நாங்க..நீங்களும் சசி ஆன்டிய பி்ன்னாடி வச்சுட்டு இதை தொடர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கறேன்.

4.அணுகுமுறை:  நிச்சயமாய் நீங்க இதில் மாறியே ஆகணும். பழைய காலத்தை மறந்திருக்க மாட்டீங்கனு நம்பறேன். இந்த அணுகுமுறையால் தான் ஆட்சிகட்டிலில் இருந்து தலைகுப்புற போன முறை நீங்க விழுந்தது. எளிதில் யாரும் சுலபமாய் சந்திக்கும் மக்கள் தலைவராய் நீங்க இருக்கணுமே தவிர பால்கனி லேடியாய் கைகாட்டிட்டு போகக்கூடாது. அணுகுமுறையிலும் எளிமையானவராய் இருக்கணும்.

5.டிராபிக் ஜாம்:  நீங்க போயஸ் கார்டனில் குளிச்சுட்டுஇருக்கும்போதே இங்க சென்னை முழுக்க டிராபிக்கை நிப்பாட்டி வச்சு சட்டசபைக்கு போற உங்க காரை அத்தனை பேரும் மனசால சபிக்கவச்சாங்க. அய்யா ஆட்சியில் நிஜமாகவே இந்த கண்றாவியெல்லாம் இல்லை. 10 நிமிடம் முன்தான் டிராபிக் கன்ட்ரோல் பண்ணுவாங்க. டிராபிக் ஜாம் ஏற்படுத்தி மக்களை டிராஜடி பண்ணாதீங்க. நீங்க வருவதும் போவதும் உங்களை தேர்ந்தெடுத்த எங்களுக்கு டிஸ்டர்ப் ஆக இல்லாமல் பார்த்துக்கங்க.

6.சட்டசபை நடவடிக்கை:  சட்டசபை நடவடிக்கை ரொம்ப ரொம்ப டீசண்ட் ஆக இருக்கும்படி பார்த்துக்கங்க. யாரும் யாருக்கும் விரோதினு நினைக்காமல் எதிர் கட்சிகாரர்களாய் இருந்தாலும் யாரைப் பார்த்தாலும் இயல்பாய் பேசி குசலம் விசாரிக்கற அளவுக்கு உங்க மனசை விலாசமாய் வச்சுக்கங்க.

இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். நீங்க ஆட்சிக்கு வரப்போறீங்க. இனிமேலாவது வீட்டுச் செலவில் ஏதோ இரண்டு ரூபா காசாவது மிஞ்சும்கற நம்பிக்கையில் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க கிளம்பறேன். (கான்பிடன்ஸ் மேடம் கான்பிடன்ஸ்) ஓவர் ஆக உங்க ஆளுங்க ஆடாமல் நாலுகாசோட மக்கள் மனசையும் சேர்த்து சம்பாதிக்கச் சொல்லுங்க. நீங்களும் சுயமா முடிவெடுத்து ஏதோ எங்களை மாதிரி ஏழைபாளைகளுக்கு நல்லது செய்ங்கம்மா.
* * * * * * *

20 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய கடிதத்தை அப்படியே தலைமை செயலகம் அனுப்பியாச்சி...

அப்படி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லையென்றால்
அடுத்த முறை தோறபடித்து விடலாம்...

சரியா...

MANO நாஞ்சில் மனோ said...

மொத்தத்துல அம்மா மாறனும், பார்ப்போம்...

கடம்பவன குயில் said...

@ கவிதைவீதி சௌந்தர்

நன்றி நண்பரே. நிச்சயமாய் சில விஷயங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். மக்கள் பவர் என்ன என்று ஆட்சியாளர்களுக்கு புரிஞ்சுருக்கும்.

கடம்பவன குயில் said...

@ கவிதைவீதி சௌந்தர்

நன்றி நண்பரே. நிச்சயமாய் சில விஷயங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். மக்கள் பவர் என்ன என்று ஆட்சியாளர்களுக்கு புரிஞ்சுருக்கும்.

கடம்பவன குயில் said...

@ MANO நாஞ்சில் மனோ


//மொத்தத்துல அம்மா மாறனும், பார்ப்போம்...//

இதற்குமுன் மக்கள் கற்றுத்தந்த பாடத்தை மறந்திருக்க மாட்டார் என்று நம்புவோம்.

Anonymous said...

அடுத்த ஆட்சி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று 'நச்' என்று சொன்னதற்கு பாராட்டுக்கள்!!! அனைத்து தமிழ் மக்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது தங்களின் கருத்துக்கள்!!! புரிந்து நடந்தால் நல்லது!!!இல்லை என்றால் மக்கள் மீண்டும் மாற்றம் தருவார்கள் என்பதை வுணர்ந்து மக்களுக்காக ஆட்சி புரிய வேண்டும்!!! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!!! ---- ரியாதிலிருந்து ஹரி

Rathnavel Natarajan said...

பார்க்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

எங்கே ஓப்பனிங்கே சரி இல்லையே? சட்ட சபை பில்டிங்க் விவகாரம்...

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

குணசேகரன்... said...

மாற்றம்...நன்மையா? தீமையா?...விரைவில் தெரியும்..

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

போளூர் தயாநிதி said...

மக்கள் பவர் என்ன என்று ஆட்சியாளர்களுக்கு புரிஞ்சுருக்கும்.

கடம்பவன குயில் said...

@ வேடந்தாங்கள் கருண்

புதிய பதிவரான என்னையும் பெரிய பெரிய பதிவர்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நண்பரே. கூடுதல் பொறுப்புடன் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்(தேர்தல் எபஃக்ட் இன்னும் போகல பாஸ்???)

கடம்பவன குயில் said...

@ #கவிதை வீதி# சௌந்தர்

மாற்றான் தோட்டத்து மணம் வீசும் மலர்கள். பார்த்தேன் நண்பரே. கவிதையே கவிதைகளை அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை. நாங்களேல்லாம் உங்கள பார்த்து கவிதை எழுத வந்தவங்க. குரு கையால் சாரி கவிதையால் அறிமுகமானதை மிக பெருமையாய் நினைக்கிறேன். மிக்க நன்றி தோழரே.

கடம்பவன குயில் said...

@ போளுர் தயாநிதி

//மக்கள் பவர் என்ன என்று ஆட்சியாளர்களுக்கு புரிஞ்சுருக்கும்.//

நிச்சயமாய் . ஒவ்வொரு அடியும் எடுத்துவைக்கும்முன் யோசிப்பார்கள் நம்மையும்.

எல் கே said...

விலைவாசி : நூறு சதவீதம் மாநில அரசால மட்டும் கட்டுப்படுத்த முடியாது, வேண்டுமென்றால் வரிகளை குறைக்கலாம் அதன்மூலம் விலைவாசி குறையும்

மின்வெட்டு : உடனடி தீர்வு இல்லை. புதிய மின்திட்டங்கள் துவங்கி நமக்கு மின்சாரம் கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆகலாம்

குடும்ப அரசியல் : மன்னார்குடி குடும்பத்தை உள்ள விடாமல் இருந்தால் சரி

அணுகுமுறை : மாறி இருக்கற மாதிரி தோணுது . இதுவரை வந்த பேட்டிகள் மாற்றத்தை காட்டுகிறது

எல் கே said...

ட்ராபிக் ஜாம : இந்த முறை இதிலும் மாற்றம் இருக்கலாம்


நன்றிங்க

கடம்பவன குயில் said...

@ எல் கே.

கண்டிப்பாய் நிறைய மாற்றங்கள் ஜெ மேடத்திடம். வரவேற்கத்தகு்ந்த மாற்றங்கள். முன்னுரிமைதரவேண்டிய விவகாரங்களுக்கு கண்டிப்பாய் முன்னுரிமைதந்து தீர்வு காணவேண்டும். மதுரையில் 3 மணிநேரமாய் இருந்த மின்வெட்டு இப்போ நள்ளிரவு அரைமணிநேரம், அதிகாலை அரைமணிநேரம் இடையில் 1மணி நேரம்என கூடுதல் நேரம் ஆகி மொத்தமாய் 5 மணி நேரம் மினவெட்டாய் ஆகியிருக்கிறது கடந்த 5 நாட்களாய்.ஒண்ணுமே புரியல.

Link

Related Posts Plugin for WordPress, Blogger...