Thursday 10 March 2011

நீங்காத நினைவுகள்








தொட்டால்தான் உடையுமென்பதற்கு
கண்ணாடியல்ல இதயம் .
உன் பார்வையம்புகள் பட்டமாத்திரத்தில் 
பற்றிஎரிந்ததடி என் மனது.
பாவி உன்பின் ஓடி இணைந்ததடி 
உன் உரிமையான என் இதயம்.

எத்தனை இரவுகள்
 தூங்காதிருப்பினும் சரியே 
தூங்குவதானால் இருவரும் 
ஒருசேர தூங்கவேண்டும் என்றவளே,
என் இனியவளே , 

நீ மட்டும் இன்று.....
நீங்கா துயிலில் கல்லறையில்......
நானோ மீளாத் துயரில் 
உன் நினைவில்.............

6 comments:

Anonymous said...

இதயம் கண்ணாடி அல்ல!!!
புதிய முயற்சிக்கு பாராட்டு!!!
தொடரட்டும் வுனது நெடும்பயணம்!!!

வாழ்த்துக்களுடன்
ஹரி
ரியாத்
ஸௌதி

R.Gopi said...

தொடாமல் நொறுங்கிய இதயம் கண்டேன்...
உள்ளே வலி கொண்டேன்...

//நீ மட்டும் இன்று.....
நீங்கா துயிலில் கல்லறையில்......
நானோ மீளாத் துயரில்
உன் நினைவில்......//

திடீர் திருப்பமென வந்தது இந்த முடிவு வரிகள்...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....

சக்தி கல்வி மையம் said...

Nice.,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாத்தான் இருக்கு..

அருமை தொடருங்கள்..

திரட்டிகளில் இணைப்பு கொடுங்கள்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை..மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் சகோ Word verification நீ்க்கி விடுங்கள்

Praveenkumar said...

ம்ம்..!!! நல்லா இருக்ககுங்க தலைவா..!! வாழ்த்துகள்...!!

Link

Related Posts Plugin for WordPress, Blogger...