Tuesday 24 May 2011

அழிக்க இயலாத கல்வெட்டுகள்..!!

நெஞ்சே இல்லா தந்தையின்
நெஞ்சுவலி நாடகத்தை நம்பி.......
அத்தை மகளை கரம்பிடித்து
ஆருயிரே உனைத் தொலைத்தேன்!
ஆனாலும்.......
என் ஆழ்மனதில்
உன் நினைவுகள்.......
ஆற்றுமணலின்
வண்டலென
மென்மையாய்.......
அழிக்க இயலாத
அழகான ஓவியமாய்..!

தலைமுறை இடைவெளியில்
தமையனுக்கும் தந்தைக்குமிடையில்
ஏச்சாலும் பேச்சாலும்........
மனமுடைந்து மரணம் யோசித்த தருணம்!
அன்பு வார்த்தைகளால் எனக்கு
புது உலகம் காட்டி
மறுவாழ்வு அளித்த
அன்பு தேவதையே......


என் மகளுடன்
நான் கொஞ்சும்
இந்தத் தருணம்......
நீயிட்ட உயிர்ப்பிச்சை!!

என் பெயரின்பின்
நானெழுதும் பட்டம்.....
அதற்கான உன் உழைப்பின்
ஞாபகங்களை கிள்ளிவிட்டுச்
செல்கிறது..!

என்னையும் உன்னையும்
பிரித்ததாய் எள்ளிநகையாடும்
இவர்களுக்குத் தெரியுமா..........
வானுக்கும் நிலவுக்கும்
பந்தம் பிரிக்க முடியாததென்பது........!
* * * * *

Saturday 14 May 2011

அடுத்த தமிழக ஆட்சி எப்படி இருக்கனும்..?? - (Next-TN-Government)

என்ன நண்பர்களே..!??! எலக்சன் ரிசல்ட் பரபரப்புக் காட்சி ஓய்ந்ததா? சங்கர் பட கிளைமாக்ஸை விட பரபரப்பாய் கழிந்தது ஓட்டு எண்ணிக்கை காட்சிகள். இந்திய கிரிக்கெட் டீம் கலந்து கொண்ட பைனல்ஸ் பார்க்கிற மனநிலையோடு டீவி பெட்டி, கணிணி முன் தவமாய் தவமிருந்த மக்கள் அனைவருக்கும் இப்போ யார் கோப்பையை   மன்னிக்கவும் யார் ஆட்சியை கைப்பற்றியது என்று தெரிந்துவிட்டதல்லவா..?

இந்த மாற்றம் மக்கள் தந்தது என்பதில் எள்ளளவும் யாருக்குமே சந்தேமில்லை. யார் நல்லாட்சி தருவார்கள் என்ற எண்ணத்தில் யாரும் ஓட்டுப் போட்டிருக்க மாட்டார்கள். யாருக்கும் அம்மா மேலயோ, அ.தி.மு.க.மேலேயோ பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்று விரும்பியதால் அ.தி.மு.க. வை விட்டால் இல்லையென்ற நிலையில் எடுத்த முடிவுதான் இது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ  சர்க்கரை என்ற நிலைதான் இது.

இந்த 5 வருடத்தில் மக்கள் படாதபாடுபட்டு இன்னொரு மாற்றத்தை எதிர்பார்க்க வைக்காமல் அம்மா ஆட்சி அமைய நாமெல்லோரும் ஆண்டவனையும், அம்மாவையும் வேண்டிக்குவோம்.

இந்த மாற்றத்ததை எதற்காக எதிர்பார்த்தோம் என்பதை அம்மா புரிஞ்சுட்டு நடந்தால் நமக்கும் நல்லது. அம்மாக்கும் நல்லது. அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததையும் எனக்கு தெரிஞ்சவரையிலும் கொஞ்சம் கடிதமாய் எழுதிவைப்போம். நம்ம பதிவர்கள் யாராவது என் கடிதத்தை அம்மாவிடம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கைதான். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.  காதில் விழுவதும் விழாததும் அவங்க அவங்க அதிர்ஷ்டம். (நம்ம அதிர்ஷ்டம்???)

1.விலைவாசி்: அப்பப்பா....... கடந்த 5 வருடங்களாய் மக்களை பாடாய் படுத்துவதில் முதலிடம் இந்த விலைவாசிக்குதான்.  முதல்வேலையே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதான். செய்வீங்களா?

2.மின்வெட்டு: ஆற்காட்டார் எங்களை வேக்காட்டில் நிற்கவைத்திருந்தார். சின்ன சின்ன தொழிற்சாலைகள், சிறு தொழில்நிறுவனங்கள் எல்லாம் சுத்தமாய் லாபம் பார்க்க முடியாமல் இழுத்துமுடிட்டு ஓடிபோக வைத்த பெருமை முழுதும் ஆற்காட்டாரையே சாரும். இது உடனே கவனித்து சரிசெய்யவேண்டிய மிக மிக முக்கிய அவசர வேலை.

3.குடும்ப அரசியல்:  இதில் நொந்து நூடுல்ஸ் ஆனவங்க தான் நாங்க..நீங்களும் சசி ஆன்டிய பி்ன்னாடி வச்சுட்டு இதை தொடர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கறேன்.

4.அணுகுமுறை:  நிச்சயமாய் நீங்க இதில் மாறியே ஆகணும். பழைய காலத்தை மறந்திருக்க மாட்டீங்கனு நம்பறேன். இந்த அணுகுமுறையால் தான் ஆட்சிகட்டிலில் இருந்து தலைகுப்புற போன முறை நீங்க விழுந்தது. எளிதில் யாரும் சுலபமாய் சந்திக்கும் மக்கள் தலைவராய் நீங்க இருக்கணுமே தவிர பால்கனி லேடியாய் கைகாட்டிட்டு போகக்கூடாது. அணுகுமுறையிலும் எளிமையானவராய் இருக்கணும்.

5.டிராபிக் ஜாம்:  நீங்க போயஸ் கார்டனில் குளிச்சுட்டுஇருக்கும்போதே இங்க சென்னை முழுக்க டிராபிக்கை நிப்பாட்டி வச்சு சட்டசபைக்கு போற உங்க காரை அத்தனை பேரும் மனசால சபிக்கவச்சாங்க. அய்யா ஆட்சியில் நிஜமாகவே இந்த கண்றாவியெல்லாம் இல்லை. 10 நிமிடம் முன்தான் டிராபிக் கன்ட்ரோல் பண்ணுவாங்க. டிராபிக் ஜாம் ஏற்படுத்தி மக்களை டிராஜடி பண்ணாதீங்க. நீங்க வருவதும் போவதும் உங்களை தேர்ந்தெடுத்த எங்களுக்கு டிஸ்டர்ப் ஆக இல்லாமல் பார்த்துக்கங்க.

6.சட்டசபை நடவடிக்கை:  சட்டசபை நடவடிக்கை ரொம்ப ரொம்ப டீசண்ட் ஆக இருக்கும்படி பார்த்துக்கங்க. யாரும் யாருக்கும் விரோதினு நினைக்காமல் எதிர் கட்சிகாரர்களாய் இருந்தாலும் யாரைப் பார்த்தாலும் இயல்பாய் பேசி குசலம் விசாரிக்கற அளவுக்கு உங்க மனசை விலாசமாய் வச்சுக்கங்க.

இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். நீங்க ஆட்சிக்கு வரப்போறீங்க. இனிமேலாவது வீட்டுச் செலவில் ஏதோ இரண்டு ரூபா காசாவது மிஞ்சும்கற நம்பிக்கையில் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க கிளம்பறேன். (கான்பிடன்ஸ் மேடம் கான்பிடன்ஸ்) ஓவர் ஆக உங்க ஆளுங்க ஆடாமல் நாலுகாசோட மக்கள் மனசையும் சேர்த்து சம்பாதிக்கச் சொல்லுங்க. நீங்களும் சுயமா முடிவெடுத்து ஏதோ எங்களை மாதிரி ஏழைபாளைகளுக்கு நல்லது செய்ங்கம்மா.
* * * * * * *

Thursday 5 May 2011

தேவதையைத் தேடினேன்




                                   எப்படி மறப்பேனுனை நான்????
                                   இவ்வுலகம் காணவந்த என்னை
                                   இன்முகம் காட்டி வரவேற்று
                                   உச்சிமுகந்த உனை........
                                   எப்படி மற்பபேனுனை நான்!!

                                   தன்முதலில் என் பிஞ்சுதேகம்
                                   ஏந்தியதுன் கரங்களே........
                                   முதலில் நான் ருசித்தது
                                   தேனில் நனைத்த தாலிஉரசி
                                   நீ தந்த செவ்வனையே.......
                                   எப்படி மறப்பேனுனை நான்!!

                                    தாயின் தர்மஅடியிலிருந்து
                                    அவ்வப்போது காப்பாற்றி
                                    இழுத்தோடும் உன்.....
                                    அன்பு உள்ளம்தனை
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!



                                    ஊரார் கண்ணுபடுமென்று
                                    ஊரடி மண்ணுடனே எப்போதும்
                                    உலா வரும் உள்ளன்புமிக்க தேவதையே.....
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!!

                                    வீட்டு விஷேசங்களில்
                                    கையில் கம்புடன்
                                    இனிக்கப்பேசி வேலைவாங்கும்
                                    எங்கள் இல்ல இனிய குயிலே.....
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!
                                    சொந்த பந்தங்கள்
                                    பிளவுபட்டு சிதறாமல்.....
                                    தன் அன்பான அரவணைப்பால்
                                    கட்டிக் காத்த கங்காருவே........
                                    எப்படி மறப்பேனுனை நான்
                                                               
                                    பாட்டி வைத்தியம் முதல்
                                    வாழ்க்கை வெற்றியின்
                                    ரகசியம் வரை.........
                                    சொல்லிக்கொடுத்துச் சென்றவளே!!
                                    எமன் அழைத்தபோது மட்டும்
                                    சொல்லாமல் சென்றதேன்??!!
                                    எப்படி மறப்பேனுனை நான்!!.
                                                                              * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...